தூத்துக்குடியில், வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, 5 வயது சிறுவன் தவறுதலாக வீட்டை உட்புறமாக தாழிட்டு கொண்டான். கதவை திறக்க முடியாததால் சிறுவன் கதறி அழுதான். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சிறுவனை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.