தூத்துக்குடியில், வெள்ளிக்கிழமை இரவு மாநகர திமுக மீனவரணி அமைப்பாளர் டேனியல் என்பவருக்குச் சொந்தமான பைக், முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் அவரது வீட்டு முன் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பைக் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக வடபாகம் போலீஸார், ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த சாம்சன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். டேனியல் மனைவி மெட்டில்டா தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.