தூத்துக்குடி கோரம்பள்ளியைச் சேர்ந்த பெரியநாயகம் (33) என்பவர், எட்டயபுரம் அருகே கீழ ஈராலில் டீக்கடையில் இருந்தபோது, முனியசாமி உள்ளிட்ட இருவரால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முனியசாமி (36), பொன்மாடசாமி (26), மாரிச்செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் வாக்குமூலத்தில், பெரியநாயகம் கூடுதலாக மது அருந்தியதால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாகத் தெரிவித்துள்ளனர்.