திருவண்ணாமலையில் டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாடப்படும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நெல்லை, மதுரை, கோவை, தூத்துக்குடி போன்ற தொலைதூர நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். www.tnstc.in மற்றும் tnstc மொபைல் APP மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.