தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் அருகே பள்ளி மாணவி ஒருவர் கடந்த மார்ச் 10ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.