தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் சிலோன் காலனியைச் சேர்ந்த அஜய்(எ) ஜப்பான் (21) என்பவர், நேற்று (நவம்பர் 6) இரவு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் தகராறு செய்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தனர். படுகாயமடைந்த அஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட், புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.