தூத்துக்குடி அழகேசபுரம் 2வது தெருவில் வசித்துவந்த கூலித்தொழிலாளி கனகலிங்கம் (47), கடந்த 10-ம் தேதி வீட்டில் மின் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி காயமடைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.