கோவில்பட்டி அருகே கயத்தாறில், வீட்டில் இருந்த பெண்ணை கத்தியால் தாக்கிய வியாபாரி, பின்னர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிரைண்டர் சத்தத்தால் ஏற்பட்ட எரிச்சலும், மது போதையும் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கயத்தாறு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.