தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு சங்கத் தலைவர் கயாஸ் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத் தொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், 272 விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. கயாஸின் திருவுருவப் படத்திற்கு விசைப்படகு மீனவர்கள், உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.