நீண்ட காலமாக செயல்பாட்டில் இருந்த 'UTS' மொபைல் செயலி சேவையை மார்ச் 1 முதல் நிறுத்தவுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்பதிவு இல்லாத சாதாரண டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை இனி 2025 ஜூலை முதல் பயன்பாட்டில் உள்ள 'RailOne' செயலி வழியாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். எனவே, பயணிகள் தடையற்ற பயணத்திற்கு புதிய RailOne செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.