திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வார்டிலேயே பயிற்சி மருத்துவர்கள் இருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ திருச்சி பகுதியில் வைரலாக பரவி வரும் நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.