திருச்சி ஸ்ரீரங்கம் அருகே வாகன சோதனையின் போது, தடை செய்யப்பட்ட ஹேண்ஸ், கூல் லிப் உள்ளிட்ட சுமார் 13 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ₹1.04 லட்சம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தென் உரையை சேர்ந்த சபீர் முகமது மற்றும் மேல சிந்தாமணியை சேர்ந்த சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.