திருச்சி: சிறுமி கூட்டு பாலியல் இல்லை- காவல் ஆணையர் தகவல்

1பார்த்தது
திருச்சி: சிறுமி கூட்டு பாலியல் இல்லை- காவல் ஆணையர் தகவல்
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 14 வயது சிறுமிக்கு மதுபோதையில் கார் ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும், சிவகங்கையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மாரிசெல்வன் மதுபோதையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காந்தி மார்க்கெட் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர் என காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி