திருச்சி மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைதான மகேஷ்வரன், மன உளைச்சல் காரணமாக சுவிட்ச்போர்டை உடைத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை தடுக்க முயன்ற சிறை வார்டன் சிவாவை, மகேஷ்வரன் உடைந்த சுவிட்ச்போர்டால் தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறை அதிகாரி வேங்கட சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் கேகேநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.