வரும் மார்ச் 11ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, மாத்தூர் சுற்றுச்சாலை பகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள இடங்களை பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இந்த வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.