தா. பேட்டை அருகே பால் வியாபாரி தற்கொலை

55பார்த்தது
தா. பேட்டை அருகே பால் வியாபாரி தற்கொலை
தா. பேட்டை அடுத்த என் கருப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் பால் வியாபாரி இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில் தா. பேட்டை அடுத்த வாலசிராமணி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த ஆனந்தன் அங்கு யாரும் இல்லாத சமயத்தில் மிகுந்த மன வேதனையில் துக்கம் தாங்க முடியாமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தா. பேட்டை போலீசார் இறந்து போன ஆனந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.