திருச்சியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்த லலிதா, குடும்ப தகராறு காரணமாக நேற்று மணச்சநல்லூர் புள்ளம்பாடி வாய்க்காலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பகுதி இளைஞர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.