மணப்பாறை அருகே நாட்டார்பட்டியைச் சேர்ந்த கண்ணன், தனது மகளை பள்ளியில் விடுவதற்காக டூவீலரில் நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகள் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். துவரங்குறிச்சி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.