கரூர் மாவட்டம் சேர்வைக்காரன்பட்டி அங்கன்வாடியில் சமையலராக பணிபுரிந்து வந்த அமிர்தம், நேற்று சனிக்கிழமை வையம்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, கருங்குளம் பகுதியில் நாய் ஒன்று குறுக்கே வந்ததால் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.