துறையூர் அருகே கொப்பம்பட்டியில் வசிக்கும் மெய்யப்பன்-சித்ரா தம்பதியினரின் மகள் ரேணுகா (20), மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 15ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார். நேற்று, வீட்டிற்கு பின்புறம் உள்ள கிணற்றில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. உப்பிலிபுரம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.