திருச்சி கலையரங்கத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 5337 பயனாளிகளுக்கு 13.57 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.