திருச்சியில் நேற்று முதல்வர் ஜோசப்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த எச்சரிக்கையை மீறி ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். இதனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.