திருச்சி மாவட்டத்தில், காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின்படி, டாஸ்மாக் மதுபான பாட்டில்களை வாங்கும் போது வாடிக்கையாளரிடம் கூடுதலாக ரூபாய் 10 பெறப்படும். காலி மது பாட்டில்களை மீண்டும் அதே மதுபான கடையில் ஒப்படைத்தால் வாடிக்கையாளருக்கு 10 ரூபாய் வழங்கப்படும்.