திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே கல்பட்டி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில், அவரை அவரது மனைவி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.