திருச்சி: அதிமுக துரோகிகள் கையில் உள்ளது டிடிவி பேட்டி

1பார்த்தது
திருச்சி: அதிமுக துரோகிகள் கையில் உள்ளது டிடிவி பேட்டி
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், செங்கோட்டையனை நீக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர் என்றும், துரோகத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட அதிமுக இன்று துரோகி கையில் சிக்கி உள்ளது என்றும் கூறினார். அதிமுக தொண்டர்கள் இதை உணரவில்லை என்றால் ஆண்டவனாலும் அதிமுகவை காப்பாற்ற முடியாது என்றும், அதிமுகவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அமமுகவிற்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். துரோகத்திற்கு நோபல் பரிசு தர வேண்டும் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் தர வேண்டும் என்றும் அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி