திருச்சியில் இருந்து ஓசூர் நோக்கி நேற்று இரவு (நவம்பர் 7) சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பெருகமணி அருகே கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி கடுமையாக சேதமடைந்ததுடன், காரில் பயணித்த இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.