திருச்சி: நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

59பார்த்தது
திருச்சி: நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
திருச்சி மாவட்ட கலை பண்பாட்டுத் துறை, மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் சார்பில், நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களில் நலத் திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

திருச்சி ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், நல வாரியத் தலைவர் வாகை. சந்திரசேகர் பங்கேற்று, வாரிய உறுப்பினர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். திருச்சி மாவட்டத்தில், 16 பேருக்கு மூக்குக் கண்ணாடி நலத் திட்ட உதவித் தொகையாக ரூ. 24 ஆயிரம், 31 பேருக்கு கல்வி உதவித் தொகை ரூ. 52,700, மூன்று பேருக்கு திருமண உதவித் தொகை ரூ. 15,000, எட்டு கலைஞர்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நலத்திட்ட உதவித் தொகை ரூ. 2,00,000, மகப்பேறு உதவித் தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி