தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சீரங்கம் கோட்டச் செயற்பொறியாளர் செல்வம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேங்கைமண்டலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (டிச. 26) மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மூவானூர், வேங்கைமண்டலம், தண்ணீர்பந்தல், வேப்பந்துறை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ. 2 கரியமாணிக்கம், செந்நகரை, நாமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி. மணியம்பட்டி, துடையூர், தீராம்பாளையம்,
திருப்பைஞ்ஞீலி, பூனாம்பாளையம், திருவெள்ளறை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி, டி. புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லயம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.