திருச்சி: சமூகநீதி ஆட்சி தான் எங்கள் இலக்கு – அமைச்சர் ரமேஷ்

0பார்த்தது
திருச்சி ஒத்தக்கடை பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1331வது சதய விழாவில் அமைச்சர் ரமேஷ் கலந்துகொண்டு, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தங்களது அரசின் அடிப்படை கொள்கை மதச்சார்பற்ற சமூகநீதி என்றும், அதையே கட்சித் தலைவர் விஜய் முன்னிறுத்தி வருகிறார். தந்தை பெரியார் மற்றும் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, சாதி வேற்றுமைகளை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறோம்" என்றார். மேலும், இந்து சமய அறநிலைத்துறையில் உயர்மட்ட அதிகாரிகள் முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை எவரும் அதிகார துஷ்பிரயோகம் அல்லது ஊழலில் ஈடுபட இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி