திருச்சி: இரும்பு கம்பிகள் திருடிய வாலிபர் கைது

63பார்த்தது
திருச்சி: இரும்பு கம்பிகள் திருடிய வாலிபர் கைது
திருச்சி, ஏர்போர்ட், ஜே. கே நகர் கோதாவரி தெருவில் உள்ள ஒரு புதிய கட்டிடத்தில் வைத்து இருந்த ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள 7 அடி உயர இரும்பு கம்பி திருட்டு போனது. இது தொடர்பாக தஞ்சை மாவட்டம் மாரியப்ப முதலியார் சந்தை பகுதியை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பத்மநாபன் கொடுத்த புகாரின் பேரில் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்பு கம்பியை திருடிய திருச்சி, கே. சாத்தனூர். வடக்கு முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த குமரகுரு (38) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி