சமயபுரத்தைச் சேர்ந்த அரவிந்தன், ராஜேஷ், புகழேந்தி ஆகியோர் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க நின்றிருந்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், புகழேந்தி என்பவர் அரவிந்தன் மற்றும் ராஜேஷ் இருவரையும் கத்தியால் குத்தினார். இதில் இருவரும் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், புகழேந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.