
துறையூர் தனியார்நிறுவன பாதுகாவலர்களுக்கு தீதடுப்பு நிகழ்ச்சி
துறையூர் தீயணைப்பு நிலையத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் காவலர்களுக்கான தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், தீ விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படும்போது தீ தடுப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். துறையூர் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர்கள் பாலச்சந்தர், சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் இந்த ஒத்திகையை நடத்தினர்.



































