திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே அகிலாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் முத்துக்குமார் வீட்டில் நேற்று காலை அவரது மகன் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.