திருச்சி: ஆட்டோ மோதி பலியான முதியவர்

498பார்த்தது
திருச்சி: ஆட்டோ மோதி பலியான முதியவர்
சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் ரத்தினம், சாலையை கடக்க முயன்றபோது பயணிகள் ஆட்டோ மோதி உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் சந்துருவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி