திருவெறும்பூர்: தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை

67பார்த்தது
திருவெறும்பூர்: தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி இவர் துவாக்குடி சிட்கோ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி இவர் பெல்வளாகத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு சாருலதா என்ற மகள் உள்ளார். 

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தேவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தேவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you