முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் ஆற்றுப்படுகையில் லாரியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிராம நிர்வாக அலுவலர் பிரியா அளித்த தகவலின் பேரில், போலீசார் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த லாரி டிரைவர் கதிரேசன் மற்றும் லாரி உரிமையாளர் மணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேனையும் பறிமுதல் செய்தனர்.