திருச்சி ஏர்போர்ட் பாரதி நகர் மற்றும் கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக கார்த்திகேயன், ஸ்ரீராம், ராமச்சந்திரன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.