மணப்பாறை அருகே கொட்டப்பட்டு பகுதியில் பாலாஜி வீட்டில் நேற்று இரவு மர்மநபர்கள் புகுந்து பீரோவில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றனர். மேலும், அருகில் உள்ள ஆறுமுகம் வீட்டில் ஆறு சவரன் தங்க நகைகள் திருடு போனது. இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.