திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏழுர்பட்டி மின்வாரிய அலுவலகம் பின்புறம் வைக்கப்பட்டிருந்த 3 மின்மாற்றிகள் மற்றும் தளவாட பொருட்கள் திடீரென காணாமல் போனதாக தெரியவந்தது. இது குறித்து மின்வாரிய உதவி பொறியாளர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.