மணப்பாறை அருகே உள்ள மஞ்சம்பட்டியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு செவல்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் தம்மை சமூக ஆர்வலர் என்று கூறிக்கொண்டு உள்ளே சென்று 17 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் இது தொடர்பான வழக்கு முடிந்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் குற்றவாளி வெற்றிவேலுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.