திருச்சி கிராப்பட்டி அன்பு நகரைச் சேர்ந்த 19 வயது சந்தியா, எடமலைப்பட்டி புதூரில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.