தமிழக அரசு உத்தரவின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டோங்ரே பிரவீன் உமேஷ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு செல்வநாகரத்தினம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறை உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு வரும் நிலையில், இந்த புதிய நியமனம் அமைந்துள்ளது.