திருச்சி காட்டூரில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2024-2025 நிதியாண்டில் நபார்டு வங்கியின் நிதி உதவியுடன், ரூ. 2.12 கோடி மதிப்பில் மூன்று தளங்கள் கொண்ட, ஒன்பது வகுப்பறைகள் அடங்கிய புதிய கட்டிடம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் மாணவிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய கட்டிடம் மாணவர்களின் கல்விக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.