
திருச்சி மது அருந்திய வாலிபர் மூச்சுத் திணறலால் சாவு
திருச்சி சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணங்குடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 31 வயது மணிகண்டன், நேற்று தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




































