மணச்சநல்லூர் அருகே தெற்கியூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது நவீன்ராஜ் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவனின் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.