துறையூர் அருகே கொப்பம்பட்டியில் வசிக்கும் 63 வயது மூதாட்டி நல்லாங்கா நேற்று காய்கறி வாங்கிவிட்டு வீடு திரும்பும்போது, இரு மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்கத் தாலிச் செயினைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து நல்லாங்கா அளித்த புகாரின் பேரில், உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.