மதுரை மாவட்டம் நாகமங்கலத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று, அவர் தனது இருசக்கர வாகனத்தில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, சாலை ஓரம் விழுந்து தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.