பாஜக பெண் நிர்வாகி அலிசா, தன்னை பற்றி யூடூபர் முக்தர், திருச்சி
சூர்யா ஆகியோர் ஆபாசமாக பேசுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அப்போது வெளியே வந்த அவர் கண்ணீர் மல்க பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார். இந்தநிலையில் போலீசார் திருச்சி சூர்யாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.