திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, திருச்சிராப்பள்ளி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் பிற மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகள் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான அரசாணை நகலை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.