திருச்சி கொள்ளிடம் ரயில்வே பாலம் அருகே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட முதியவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஸ்ரீரங்கம் தீரன் நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்டனி அரவிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.